Pages

Wednesday, November 21, 2018

பித்தா ! பிறை சூடீ! பெருமானே ! அருளாளா ! - பாடல் வரிகளுடன்



சுந்தரர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறை திரு வெண்ணெய்நல்லூர், இந்தளம் பாடல் 1 பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா! எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? பாடல் 2 நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை பேய் ஆய்த்திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன் வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? பாடல் 10 கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக்கையால் பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே?

No comments:

Post a Comment